×

சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 27 பேர் குண்டாசில் கைது: காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் உட்பட 27 பேரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னையில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, பெட்ரோல் குண்டு வீச்சு, செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 16ம் தேதி முதல் 22ம் தேதி வாரயிலான ஒரு வாரத்தில் ரவுடிகள் உட்பட 27 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாநகர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறிப்பாக எம்.கே.பி.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த திருவொற்றியூரை சேர்ந்த பிரசாந்த் (எ) குள்ள பிரசாந்த் (29), கஞ்சா விற்பனை செய்து வந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி துரை (எ) கட்டதுரை (23), புழல் பகுதியில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட கிஷோர் (24), பெண்களை வைத்து பாலியல் ெதாழில் செய்து வந்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (எ) பாஷா பாய் (39), வழிப்பறியில் ஈடுபட்டு வந்த உள்ளகரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (எ) தினேஷ் (எ) வெள்ளை தினேஷ் (27), வாணுவம்பேட்டை பகுதியை ேசர்ந்த முத்துகிருஷ்ணன் (எ) முத்து (29), சந்தோஷ்குமார் (எ) சிமிலி (30), ஐ.சி.எப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பூர் பகுதியை சேர்ந்த இளமாறன் (22), இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்நத ராஜேஷ் (38), கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செம்மஞ்சேரியை சேர்ந்த நாகராஜ் (எ) நாகா (52), அயனாவரம் பகுதியில் நண்பரை கத்தியால் குத்திய வழக்கில் ஆவடியை சேர்ந்த மண்டை மகேஷ் (எ) மகேஷ்குமார் (28), வேப்பேரி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த தினேஷ் (எ) சொசைட்டி தினேஷ் (30) உட்பட மொத்தம் 27 பேரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் செய்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

The post சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 27 பேர் குண்டாசில் கைது: காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kundazi ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...