×

ஷேர் மார்க்கெட்டில் ரூ.1.5 லட்சத்தை இழந்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: ஆவடி அடுத்த அயப்பாக்கம் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் சூர்யா(25). இவரது மனைவி நந்தினி(23). இருவரும் 5 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சூரியா ஆன்லைன் ஷேர் மார்க்கெட் பிசினஸ் செய்தார். இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ஷேர் மார்க்கெட் பிசினசில் பல லட்சங்களை இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், மனைவியின், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையையும் அடமானம் வைத்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார்.

மேலும், தொடர்ந்து அதிலும் இழப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சூர்யா நேற்றுமுன்தினம் இரவு தூக்கிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post ஷேர் மார்க்கெட்டில் ரூ.1.5 லட்சத்தை இழந்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Surya ,Mother Teresa Street, Ayappakkam ,Avadi ,Nandini ,Pudumappilla ,Dinakaran ,
× RELATED பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!