×

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பட்டியல் இன மக்கள் மாண்புடன் வாழ கையெழுத்து இயக்கம்

திருப்போரூர்: திருப்போரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பட்டியல் இன மக்கள் மாண்புடன் வாழ உறுதி செய்வதற்கான கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. ஹைதராபாத் நகரில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட தலித் உரிமைக்கான அமைப்புகள் சார்பில், பட்டியல் இன மக்கள் மாண்புடன் வாழ உறுதி செய்வதற்கான கோரிக்கை சாசனத்தை தயாரித்துள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில், திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்போரூர் ஒன்றிய செயலாளர் லிங்கன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் செங்கை மாவட்ட தலைவர் சண்முகம், மா.கம்யூ. கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், ஒன்றிய தலைவர் மணிவண்ணன், பொருளாளர் நந்தகுமார், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பொன்னப்பன் ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கையெழுத்து பெற்றனர்.

The post தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பட்டியல் இன மக்கள் மாண்புடன் வாழ கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Abolition ,Untouchability Front ,Tirupporur ,
× RELATED கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி