×

பச்சைநிற பால் பாக்கெட் விற்பனை ரத்து முடிவை கைவிட வேண்டும்: ஓபிஎஸ், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை: ஆவின் நிறுவனத்தால் தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் பச்சை நிற பால் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்டுள்ளது. சென்னையில், ஆவின் பால் வாங்கும் மொத்த வாடிக்கையாளர்களில் 40 சதவீத வாடிக்கையாளர்கள் பச்சை நிற பாக்கெட் பாலை வாங்கி வருகின்றனர். பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நாளை முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை ரத்து என்ற முடிவை கைவிட வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச் செயலாளர்): பச்சை நிற பால் பாக்கெட்டுகளை திடீரென நிறுத்துவதன் மூலம் அதை பருகி வந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.எனவே, பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப நான்கு விதமான பால் பாக்கெட்டுகளையும் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

The post பச்சைநிற பால் பாக்கெட் விற்பனை ரத்து முடிவை கைவிட வேண்டும்: ஓபிஎஸ், டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,DTV.Thinakaran ,Chennai ,O. Panneerselvam ,DTV ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...