×

ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து: உயிர் தப்பினார் நடிகர் சூர்யா


சென்னை: ரோப் கேமரா அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் லேசான காயங்களுடன் நடிகர் சூர்யா உயிர் தப்பினார். சூர்யா நடிக்கும் படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்குகிறார். திஷா பதானி, யோகி பாபு, சமுத்திரக்கனி, சுனில் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் சமூக, சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள கதையம்சம் கொண்டது. பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து இப்படத்தின் காட்சிகளை இன்று காலை படமாக்கி வந்தனர். அப்போது சூர்யா மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் சிலர் நடித்துக்கொண்டிருந்தனர். ராட்சத கேமரா ஒன்று ரோப்பில் கட்டி காட்சிகளை படமாக்கி வந்தனர்.

அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோப் அறுந்து கேமரா கீழே விழுந்தது. இதில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதே ஈவிபி பிலிம் சிட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்தபோது, கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

The post ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து: உயிர் தப்பினார் நடிகர் சூர்யா appeared first on Dinakaran.

Tags : Suriya ,CHENNAI ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு