×

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழை தொடரும்.. வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி..!!

சென்னை: தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழை தொடரும் என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழை தொடரும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை 10 சதவீதம் மட்டுமே குறைவாக பெய்துள்ளது. இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு – 32செ.மீ., பெய்தது 28செ.மீ.

சென்னையில் இதுவரை 41செ.மீ. மழை பதிவாகி உள்ளது; இயல்பு 57செ.மீ. சென்னையில் இயல்பு மழையான 57 செ.மீ. மழையில் 41 செ.மீ. மழை பதிவாகி உள்ளது; இது இயல்பைவிட 28% குறைவாக பெய்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் 37 செ.மீ. அதி கனமழை கொட்டித் தீர்த்தது. 45 இடங்களில் கனமழை, 8 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோட்டில் கனமழை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் இன்று லட்சதீவு பகுதிகள், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

The post தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழை தொடரும்.. வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Balachandran ,Meteorological Centre ,Nungambakkam ,Tamilnadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...