×

போலி ஆபாச வீடியோ விவகாரம் சமூக வலைதள நிறுவனங்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை: தீவிர நடவடிக்கைக்கு வலியுறுத்துமா?

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி சமீபத்தில் முன்னணி நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, கேத்ரினா கைப் மற்றும் கஜோல் ஆகியோரது போலி ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் சமூக ஊடகங்கள் போலி ஆபாச வீடியோக்களை நீக்க தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவற்றின் மீது பாரபட்சமற்ற எதிர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருந்தார். மேலும் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில், இது தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இது பற்றி சமூக வலைதள நிறுவனங்களுடன் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், போலி ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அமைச்சகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் போது, போலி ஆபாச வீடியோவை நீக்க தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து சமூக வலைதள நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

The post போலி ஆபாச வீடியோ விவகாரம் சமூக வலைதள நிறுவனங்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை: தீவிர நடவடிக்கைக்கு வலியுறுத்துமா? appeared first on Dinakaran.

Tags : Govt ,New Delhi ,Rashmika Mandhana ,Katrina Kaif ,Kajol ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை