புதுடெல்லி: சைபர் கிரைம் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 24 இடங்களில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து, போலி கால் சென்டர்கள் மூலம் மோசடி செய்வதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. டெல்லி, நொய்டா, குருகிராம், குஜராத்தில் உள்ள 24 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் டிஜிட்டல் ஆதாரங்கள், ரூ.2.2 கோடி ரொக்கம், சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
The post சைபர் கிரைம் மோசடி 24 இடங்களில் சிபிஐ ரெய்டு appeared first on Dinakaran.