×

எ.வ.வேலு குடும்பத்தினரின் கல்லூரியில் ஐடி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு குடும்பத்தினருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நேற்று ஆவணங்களை ஆய்வு செய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் நடந்த சோதனையில், ஒரு ரூபாய் கூட கைப்பற்றவில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார். இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் குடும்பத்தினர் நிர்வகிக்கும் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நேற்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 6 அதிகாரிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. கடந்த முறை நடந்த சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றை மீண்டும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆவணங்களை மறு ஆய்வு செய்யும் வருமான வரித்துறையின் வழக்கமான நடவடிக்கை இது என தெரியவந்துள்ளது.

The post எ.வ.வேலு குடும்பத்தினரின் கல்லூரியில் ஐடி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : AV Velu ,Thiruvannamalai ,Income Tax department ,Minister ,Tiruvannamalai ,A.V.Velu ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற...