×

பொன்னமராவதி வட்டார விவசாயிகள் இன்றைக்குள் பயிர்காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

 

பொன்னமராவதி,நவ.22: பொன்னமராவதி, வேளாண்மை உதவி இயக்குனர் ரஹ்மத் நிசாபேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொன்னமராவதி வட்டாரத்தில் 2023-2024ம் ஆண்டிற்கான சிறப்பு பருவம் நெல் (சம்பா) பயிர்கள் சாகுபடி செய்து வரும் நிலையில், விவசாயிகள் அனைவரும் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கு காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலினால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் பாதிப்புகளிலிருந்து தாங்கள் வாழ்வாதாரத்தையும், வருவாய் இழப்பையும் சரிசெய்து கொள்ள பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டடத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நெல் பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமிய தொகையாக ரூ.513 செலுத்த கேட்டுகொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகள் கடைசி நாளான இன்று 22ம்தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம். காப்பீடு செய்ய முன் மொழிவு படிவம், பதிவு படிவம் அடங்கல், சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் காப்பீடு தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post பொன்னமராவதி வட்டார விவசாயிகள் இன்றைக்குள் பயிர்காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati district ,Assistant Director of ,Ponnamaravati ,Assistant Director ,Rahmat Nisabegam ,
× RELATED கோடை வெயிலில்குறைந்த நீரை...