×

வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் தெருநாய் கடித்து 30 பேர் காயம்

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் அரசு மற்றும் தனியார் வங்கிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தண்டையார்பேட்டையில் இருந்து ராயபுரம், பாரிமுனை செல்வதற்காக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த வண்ணாரப்பேட்டை ஜி.ஏ சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில், பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்து செல்வதற்காக இந்த சாலை வழியாக பெற்றோர்கள் நடந்து சென்றனர்.

அப்போது வெறிபிடித்த தெருநாய் ஒன்று அவ்வழியாக சென்ற 30க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கடித்தது. இதனால் நாயை பார்த்து பொதுமக்கள் பயந்து வேறு வழியாக சென்றனர். இதில் படுகாயமடைந்த 25 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். லேசான காயமடைந்த 5 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனிடையே அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த நாயை கல்லால் அடித்து விரட்டினர். இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் தெருநாய் கடித்து 30 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : GA ,Vannarpet ,Vannarappat ,Vannarappettai GA road ,Dinakaran ,
× RELATED வண்ணாரப்பேட்டையில் மரச்சாமான்கள்...