×

தனியார் நிறுவனங்கள் மூலம் எம்டிசியில் டிரைவர், கண்டக்டர் நியமன டெண்டர் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம், ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் குறித்து தொழிலாளர் நலத் துறை ஆய்வுக்கு எடுத்து, தற்போதைய நிலையே நீடிக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகம் இந்த டெண்டரை கோரியிருக்க கூடாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அரசு தரப்பில், விளக்கமளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பது ஊதிய முரண்பாட்டுக்கு வழி வகுக்கும்.

இது அபாயகரமான சோதனை. எனவே, டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுனர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாது. தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்படும் ஓட்டுனர்களால் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும். மாநகர போக்குவரத்து கழகம் மட்டுமல்லாமல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகத்திலும் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப வல்லுனர்கள் காலிப் பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

The post தனியார் நிறுவனங்கள் மூலம் எம்டிசியில் டிரைவர், கண்டக்டர் நியமன டெண்டர் ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MTC ,ICourt ,Chennai ,Chennai Municipal Transport Corporation ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...