×

ஆவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கைக்கூலிகள்: அமைச்சர் மனோதங்கராஜ் குற்றச்சாட்டு

நாகர்கோவில்: ஆவின் நற்பெயருக்கு கார்பரேட் கைக்கூலிகள் களங்கம் விளைவிக்கப்பார்க்கிறார்கள் என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: ஆவின் பாலில் உள்ள கொழுப்பு திருடப்படுவதாக சொல்வது மோசமான ஒரு பொய். பொதுமக்கள் எந்த பொய் பிரசாரத்தையும் நம்ப வேண்டாம். ஒவ்வொரு முறையும் தரக்கட்டுப்பாட்டு சோதனைக்கு பின்னர்தான் அது பேக்கேஜ் ஆகிறது. கொழுப்பு குறைவானது வேண்டும் என்று கேட்பவர்களுக்கு ‘டோண்டு மில்க்’ என்று புரதம் குறைந்த, 3.5 சதவீத கொழுப்புடன் நாம் சப்ளை செய்கிறோம். சராசரியாக கேட்பவர்களுக்கு கவ் மில்க் டிலைட்டும் , அதிக கொழுப்பு கேட்பவர்களுக்கு புல் கிரீம் மில்க்கையும் நாம் முன்னிலைபடுத்துகிறோம்.

பச்சை நிற கவரில் ஒரு சதவீத கொழுப்பு கூடுதல் சேர்த்து விற்பனை செய்வது உடல் நலத்திற்கு தேவையில்லை என்று கூறுகிறார்கள். டிலைட் மார்க்கெட் கூடியுள்ளது, பச்சை நிற மார்க்கெட் குறைந்துள்ளது. அவதூறு பரப்ப இங்கு சில கார்பரேட்களை வாழவைக்க சில கைக்கூலிகள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனை நாங்கள் முறிடியப்போம். 3 மாதம் பாருங்கள், இவர்கள் ஆவினை பற்றி வாய்திறந்தால் விவசாயிகளும், மக்களும் தெருவில் இவர்களை இழுத்துபோடும் காலம் வரும், அந்த வகையில் ஆவினின் வளர்ச்சி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post ஆவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கைக்கூலிகள்: அமைச்சர் மனோதங்கராஜ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Aa ,Minister ,Manodhankaraj ,Nagercoil ,Manothankaraj ,Tamil ,Nadu ,Dairy ,Manothangaraj ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...