×

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ஹமீது, அகமது ரக்சன், அருள் பிரசாத், அஜித், விமல். இவர்கள் நேற்று முன்தினம் இரவு படகில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்துள்ளனர். நேற்று காலை தனுஷ்கோடி கடல் ஐந்தாம் மணல்திட்டுப் பகுதியில் ஹோவர்கிராப்ட் கப்பலில் ரோந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் படகுடன் 5 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

பின்னர் முகுந்தராயர்சத்திரம் கடற்கரை பகுதிக்கு இலங்கை மீனவர்களை அழைத்து வந்து, தனுஷ்கோடி மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மரைன் போலீசார், 5 மீனவர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Abdul Hameed ,Ahmed Raksan ,Arul Prasad ,Ajith ,Vimal ,Thalaimannar ,Sri Lanka ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...