×

ஓரினசேர்க்கைக்கு உடன்படாத வாலிபர்கள் கொன்று புதைப்பு துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டேன்: நாட்டு வைத்தியர் பகீர் வாக்குமூலம்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (27). சென்னையில் லாரி டிரைவராக இருந்தார். இவரை கும்பகோணத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி (50) போதை மருந்து கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி கொன்று வீட்டில் புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து கேசவமூர்த்தியை கைது செய்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியவதாவது: கடந்த 2008ம் ஆண்டு கேசவமூர்த்திக்கு ஆண்மை குறைபாடு இருந்த காரணத்தால் சென்னையில் உள்ள ஒரு சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த மருத்துவரிடமே சித்த மருத்துவம் குறித்து கற்றுள்ளார். தொடர்ந்து 2009ல் தனக்கு ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் இருந்ததால் மற்ற ஆண்களுக்கு ஆசைகளை தூண்டுவதற்கு நாகூரில் உள்ள ஒருவரிடம், ஒரு வகையான மூலிகை செடி குறித்து கற்றுக்கொண்டுள்ளார். இந்த மூலிகை செடியை கேசவமூர்த்தி பொடியாக்கி, அந்த மருந்துக்கு கிறுக்கி முறுக்கி என்று பெயரிட்டு, தனது இச்சைக்கு இணங்குபவர்களிடம் கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் மூலிகை பொடியை மாத்திரையாக தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கேசவமூர்த்தியிடம் அசோக்ராஜ் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கேசவமூர்த்தி அசோக்ராஜிற்கு இரண்டு மூலிகை மாத்திரைகளை கொடுத்து தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சுயநினைவை இழந்த அசோக்ராஜின் மர்ம உறுப்பை வெட்டி, கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். உடலில் இதர பாகங்களான இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை வீட்டிலேயே மசாலாவுடன் சமைத்து உணவாக சாப்பிட்டு, நாய்களுக்கும் போட்டு ரசித்துள்ளார்.

இதேபோல், கடந்த 2021ல் நவம்பர் 27ம் தேதி மர்மமான முறையில் காணாமல் போன முகமது அனஸ் (26) என்பவருடன் கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, அவர் தனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் கோபப்பட்ட கேசவமூர்த்தி, இரண்டு மாத்திரைகளை கொடுத்து அனஸை மயக்கமடைய வைத்துள்ளார். பின்னர் யூடியூப்பில் போஸ்ட மார்டம் செய்வதை பார்த்து முகமது அனஸ் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை வீட்டின் கொல்லைப் புறத்தில் புதைத்து, குறிப்பிட்ட பாகங்களை சமைத்து சாப்பிட்டு தான் கொலை செய்ததை மறைத்து உள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* டைரியில் 194 பெயர் பட்டியல்
கேசவமூர்த்தியின் டைரியை கைப்பற்றியுள்ள போலீசார், அதில் எழுதப்பட்டுள்ள 194 பெயர்கள் பட்டியலை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பற்களுடன் தாடை எலும்பு கேசவமூர்த்தியின் வீட்டை ஆய்வு செய்த போலீசாருக்கு பற்களுடன் கூடிய தாடை எலும்பு பகுதிகள் கிடைத்துள்ளது. இதனை தஞ்சாவூர் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு இவை கேசவமூர்த்தி கொலை செய்த முகமது அனஸ் சம்பந்தப்பட்டதா என பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது

The post ஓரினசேர்க்கைக்கு உடன்படாத வாலிபர்கள் கொன்று புதைப்பு துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டேன்: நாட்டு வைத்தியர் பகீர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Bagheer ,Sandalmedu Maharajapuram ,Thiruvidaimarudur taluk ,Thanjavur district ,Chennai ,doctor ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...