×

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. மனு

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 2 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி என்.ஐ.ஏ. மனு தாக்கல் செய்துள்ளது. கடந்தாண்டு அக்.23-ம் தேதி கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது அசாருதீன், தாஹா நசீர் ஆகியோரை அண்மையில் என்.ஐ.ஏ. கைது செய்தது. கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. மனு தாக்கல் செய்துள்ளது.

The post கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. மனு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,NIA ,Chennai ,N.I.A. ,Manu ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்