×

வேப்பேரியில் உள்ள தங்கும் விடுதியில் நீதிமன்ற பெண் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: தஞ்சாவூரை சேர்ந்தவர் இவாஞ்சலின் சிந்தியா(24). இவர் சென்னை எழும்பூரில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணியாற்றி வந்தார். இதனால் இவாஞ்சலின் கடந்த ஒரு வாரமாக வேப்பேரியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்ற இவாஞ்சலின் விடுதிக்கு திரும்பினார்.

விடுதியில் உடன் தங்கி இருந்த 2 பெண்கள் இரவு பணி முடிந்து வந்து பார்த்த போது, மின் விசிறியில் இவாஞ்சலின் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உடனே சம்பவம் குறித்து விடுதி நிர்வாகம் சார்பில் வேப்பேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த போலீசார் இவாஞ்சலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இவாஞ்சலினுக்கு அவரது பெற்றோர் அரசு பணி கிடைத்ததும் திருமணம் செய்து வைக்க வரன் பார்த்துள்ளனர்.

பெற்றோர் பார்த்த வரனை இவாஞ்சலினுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும், போலீசார் வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பணியில் சேர்ந்த 10 நாட்களில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீதிமன்ற ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வேப்பேரியில் உள்ள தங்கும் விடுதியில் நீதிமன்ற பெண் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vepperi ,Chennai ,Evangeline Scindia ,Thanjavur ,City Civil Court ,Egmore, Chennai ,Dinakaran ,
× RELATED பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!!