×

ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: சென்னை இன்ஜினியருக்கு வலை

செய்யாறு: செய்யாறு அருகே ஆசைவார்த்தை கூறி காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த இன்ஜினியரை ேபாலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். கல்லூரி படிப்பை முடித்ததுள்ளார். வெம்பாக்கம் அடுத்த வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்(28). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரும், இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி குமரேசன் இளம்பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்தாராம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளம்பெண், குமரேசனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறி வந்துள்ளார். ஆனால் குமரேசன், ‘உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது’ என கூறிவிட்டாராம். மேலும் இளம்பெண்ணிடம் பழகுவதை நிறுத்தி கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து இளம்பெண் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள குமரேசனை தேடி வருகின்றனர்.

The post ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: சென்னை இன்ஜினியருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Refusal ,Seiyaru ,Thiruvannamalai ,Chennai ,Dinakaran ,
× RELATED செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!!