×

தாம்பத்ய வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி நண்பர்களுடன் செல்போனில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதிக்க சொன்ன 2வது கணவர்

விழுப்புரம், நவ. 21: தாம்பத்தியத்தின் போது இருந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, அவர் சொல்லும் நண்பர்களுடன் செல்போனில் பேசி பணம் சம்பாதிக்க சொன்ன 2வது கணவர் மீது ஆட்சியரிடம் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அருகே பனையபுரத்தை சேர்ந்த தேவநாதன் மனைவி அஸ்வினி (23). இவர் நேற்று தனது கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2018ம் ஆண்டு கடலூர் மாவட்டம் கணசம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி என்பவருடன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் விவாகரத்து பெற்றுக்கொண்டோம். இந்நிலையில் பெரியதச்சூரை சேர்ந்த தேவநாதன் என்பவர் காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் நல்ல முறையில் மகனையும் சேர்த்து கவனித்து கொள்வதாக உறுதியளித்தார். நான் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியபோது, அவர்களை சமாதானம் செய்து கொள்ளலாம் என்று கூறிய வார்த்தைகளை நம்பி 2021ம் ஆண்டு மயிலம் கோயிலில் திருமணம் செய்து கொண்டு புதுச்சேரியில் தங்கி வசித்து வந்தோம்.

தொடர்ந்து எங்களுக்கு சுவாதி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தேவநாதன் வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி இருப்பதாகவும், அதனால் அவர் போன் செய்து கொடுக்கும் நபர்களிடம் ஆபாசமாக ஆசைவார்த்தைகளில் பேசி பணம் கேட்க வேண்டும், இல்லையென்றால் நாங்கள் தாம்பத்தியத்தில் இருந்தபோது எனக்கு தெரியாமல் அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் அதனை சமூகவலைதளங்களில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டினார். நானும் அசிங்கப்பட்டு அவர் பேச சொல்லி கொடுக்கும் நபர்களிடம் பேசியபோது கூகுல்பே எண்ணிற்கு பணத்தை பெற்றார்.

ஒரு கட்டத்தில் இதற்கு மறுத்தபோது என்னையும், குழந்தைகளையும் சித்ரவதை செய்தார். இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். தேவநாதன் விசாரணைக்கு வரும்போது அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்தார். இதனிடையே தேவநாதனுடனான இல்லற வாழ்வில் தற்போது 2வது குழந்தைக்காக 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தவுடன் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி வருகிறார். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து என்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post தாம்பத்ய வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி நண்பர்களுடன் செல்போனில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதிக்க சொன்ன 2வது கணவர் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...