×

மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், நவ.21: மாற்றுத்திறனாளி குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் லிட்டில் பிளவர், அருள், தங்க குமார், பவானி, மிக்கேல் நாயகி, மரிய செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு ஆர்டிஓவிடம் வழங்கப்பட்டது.

தக்கலை: மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தக்கலையில் தாலுகா அலுவலக முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முகமது புறோஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் மனோகர் ஜஸ்டஸ், சார்லஸ், ஜெயானந்த் மற்றும் நிர்வாகிகள் பென்னட் ராஜ் ,ஆல்பர்ட் ராஜ், விமல் ராஜ், கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பின்னர் அவர்கள் தாசில்தார் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

The post மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Demonstration ,Nagercoil ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...