×

வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் தீபக் (15). கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே சீருடை, புத்தக பையுடன் பள்ளிக்கு வந்துள்ளார். ‘ஏ’ பிரிவில் படிக்கும் தீபக், திடீரென ‘சி’ பிரிவு வகுப்பறைக்கு சென்று, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கடந்த 17ம் தேதி திருப்புதல் தேர்வு விடைத்தாள் கொடுக்கும்போது தீபக் பயந்து ஓடியுள்ளார். இன்றும் (நேற்று) விடைத்தாள் கொடுப்பார்கள் என பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.

The post வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Jeganathan ,Deepak ,A. Punavasal village ,Kudaladi ,Cuddalore Government Higher Secondary School ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...