×

ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை

பூந்தமல்லி: திருவேற்காட்டில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காடு சின்ன கோலடி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் குமார் (எ) சீசிங் குமார்(55). ஆட்டோ டிரைவரான இவரும், இவரது மகனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்பேடு பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சிறை சென்றனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி ஜாமீனில் வெளிவந்த குமார் வீட்டிற்கு சென்ற போது அவரது மனைவி உஷாராணி அமைந்தகரையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.

அங்கு சென்று குமார் அழைத்தும் அவரது மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால், அவர் தனிமையில் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குமாரின் நண்பர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேற்காடு போலீசார் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Thiruvekkat ,Thiruvekadu ,Chinna Koladi Mata ,
× RELATED அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: கற்பழித்து கொலையா? என விசாரணை