×

சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம்; தலைமறைவான எஸ்எஸ்ஐ சரண்; தர்மபுரி கிளை சிறையில் அடைப்பு: சஸ்பெண்ட் செய்து எஸ்பி அதிரடி


பென்னாகரம்: பென்னாகரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரத்தில் தலைமறைவான எஸ்எஸ்ஐ சரணடைந்தார். அவரை தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். இவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் மணியகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (50). ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவருக்கு, ஏரியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, 18 வயது பூர்த்தியடையாததால் சகாதேவன் மீது காவல்நிலையத்தில் சிறுமி புகார் கொடுக்காமல் இருந்துள்ளார். தற்போது அவரது குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது.

இந்நிலையில் 18 வயது பூர்த்தியடைந்ததை தொடர்ந்து தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதமிடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் பென்னாகரம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சகாதேவன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை தர்மபுரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம்; தலைமறைவான எஸ்எஸ்ஐ சரண்; தர்மபுரி கிளை சிறையில் அடைப்பு: சஸ்பெண்ட் செய்து எஸ்பி அதிரடி appeared first on Dinakaran.

Tags : SSI ,Saran ,Dharmapuri ,Bennagaram ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...