ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான படகுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகின. விசாகப்பட்டினம் அருகே மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்காக பிரத்யேகமான மீன்பிடி துறைமுகம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு சில படகுகள் தீப்பிடித்து எரிந்தன. அப்போது காற்று பலமாக வீசியதால் மற்ற படகுகளுக்கும் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்து வநத தீயணைப்பு துறையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக, எந்த உயிரிழப்பும் இல்லை. இருப்பினும் 40 மீன்பிடி படகுகள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகின. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான படகுகள் கண் முன்னே கருகியதை கண்ட மீனவர்கள் கதறி அழுதனர். ஒவ்வொரு படகுக்கும் குறைந்தது 40 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத சில படகுகளுக்கு தீ வைத்துள்ளதாக அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாகப்பட்டின போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து.. எரிந்து நாசமான 40க்கும் மேற்பட்ட படகுகள்..மீனவர்கள் கண்ணர் appeared first on Dinakaran.

