×

வருசநாடு அருகே சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் வேண்டி கோாிக்கை

வருசநாடு, நவ.20: வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்காடு கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஆத்துக்காடு கிராமத்திற்கு என்று எரியூட்டும் கொட்டகை, சுற்றுசுவர், ஈமகிரிகை செய்ய தண்ணீர் வசதி, சாலை வசதி, காத்திருப்போர்அறை, தெருவிளக்கு போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரையும் இல்லை.

இதனால் பொதுமக்கள் பிணங்களை பிதைக்கும் பொழுது பிணங்களை எரிக்கும் பொழுது மிகவும் சிரமம் அடைகின்றனர். இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு இடம் கிராமத்தில் இருந்தும் அடிப்படை வசதி இல்லாமல் உள்ளோம். இது சம்மந்தமாக பல முறை கிராம சபைக் கூட்டங்களிலும் பொது மக்கள் மனுக் கொடுத்தும் எந்த வித பலனும் இல்லை. இதனால் தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post வருசநாடு அருகே சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் வேண்டி கோாிக்கை appeared first on Dinakaran.

Tags : Sutugat ,Varasanadu ,Varasanad ,Athukadu ,Thangammalpuram ,
× RELATED வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது