×

சின்னசேலம் அருகே பரபரப்பு: தலைமை ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு

சின்னசேலம், நவ. 19: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூண்டி கிராமம் புதுகாட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி கல்யாணி(58). தோட்டப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் ராசிபுரம் அருகில் உள்ள ஆண்டகளூர் கேட் பகுதியிலும், மகள் கரூரிலும் வசித்து வருகின்றனர். இவரது மருமகன் ஜெகதீசன், மேல்நாரியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். பெரியசாமி, தனியாக உள்ள மகளுக்கு துணையாக கரூரில் உள்ளார். இதனால் கல்யாணி தனது 85 வயதான தாய், மருமகன் ஜெகதீசன், பேரனுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கல்யாணி, அவரது பேரன் ஆகியோர் பள்ளிக்கும், மருமகன் ஜெகதீசன் பணிக்கும் சென்று விட்டனர். மூதாட்டி மட்டும் வீட்டில் இருந்தார்.

அப்போது மதிய நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து கம்பி கட்ட வரசொன்னார்கள். அதனால் வீட்டை திறந்து விடுமாறு மூதாட்டியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் என் மகள் வந்த பிறகு வா என்று கூறிவிட்டார்.  இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மூதாட்டி உள்ளே சென்றபோது பீரோ திறந்து இருந்ததை கண்டு திடுக்கிட்டார். அப்போது மர்ம நபர் பீரோவில் இருந்த பணம் ரூ.12,000, 6 கிராம் நகை ஆகியவற்றையும், மேல்மாடியில் தங்கியிருந்த ஜெகதீசன் அறையில் இருந்த 6 கிராம் செயினையும் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து கல்யாணி அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர் முத்துவேல் உள்ளிட்ட குழுவினர் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சின்னசேலம் அருகே பரபரப்பு: தலைமை ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Chinnasalem ,Periaswamy ,Kalyani ,Poondi village ,Kallakurichi district ,Panic ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை