×

ரயிலில் இருந்து பெண் இன்ஸ்பெக்டரை தள்ளிவிட முயன்ற டிக்கெட் பரிசோதகர்

ஜோலார்பேட்டை: கேரள மாநிலம், மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காலை ரயில்வே பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் சேலத்திலிருந்து ஜோலார்பேட்டைக்கு 2ம் வகுப்பு ஏ ஒன் ஏசி கோச்சில் பயணம் செய்தார். அனுமதி சீட்டும் வைத்திருந்தார். ரயில் பொம்மிடி பகுதியில் சென்றபோது சென்னையை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் சரவணகுமார், பெண் இன்ஸ்பெக்டரிடம் என்னிடம் கேட்காமல் எப்படி ஏறலாம் என கேட்டு திட்டினாராம்.
அவரை ரயிலில் இருந்து கீழே இறங்குமாறு கூறி கதவு வரை தள்ளி சென்றுள்ளார். பயணிகள் சமாதானப்படுத்தினர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய பெண் இன்ஸ்பெக்டர், டிக்கெட் பரிசோதகர் மீது சென்னை ரயில்வே எஸ்பிக்கு புகார் மனு அனுப்பினார். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

The post ரயிலில் இருந்து பெண் இன்ஸ்பெக்டரை தள்ளிவிட முயன்ற டிக்கெட் பரிசோதகர் appeared first on Dinakaran.

Tags : Jollarpet ,West Coast ,Express ,Mangaluru ,Chennai ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி