×

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்

பழநி, நவ. 18: கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாகும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் பெரும்பாலும் நேரடி நியமனம் மூலமாகவே நடைபெறுகின்றன. அந்தந்த கல்லூரிகளில் காலியாகும் பணியிடங்களுக்கு ஏற்ப நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. எனவே, போட்டி தேர்வுகள் மூலம் உதவி பேராசியரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிட நியமனம் பெரும் மர்மமாகவே உள்ளது. இதனால் தகுதியானவர்களுக்கு பணிகள் கிடைக்காமல் போகிறது. மாணவர்களுக்கு தகுதியான பேராசிரியர்களும் கிடைக்காமல் போக நேரிடுகிறது. எனவே தமிழக அரசு இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Palani ,Dinakaran ,
× RELATED பழநி நகரில் சுற்றி திரியும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்