×

சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு கால்வாயில் நீர் திறக்க வேண்டும்

சிவகங்கை, நவ. 18: சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு கால்வாயில் நீர் திறக்க வலியுறுத்தி சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம், தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய் மூலம் 113கண்மாய் வழி 6,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதன் தொடர்ச்சியாக உருவாகும் சருகணி ஆறு மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை வட்டாரங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 126 கண்மாய்கள் நீரினை பெற்று 8000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. சிவகங்கை மாவட்டம் ஒரு போக சாகுபடி  மற்றும் மேய்ச்சல், கால் நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டது.

எனவே தற்போது வைகை அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், முல்லை பெரியாறு நீர் வரத்து மற்றும் வடகிழக்கு பருவ மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்திற்கு பெரியாறு கால்வாயில் இருந்து நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு கால்வாயில் நீர் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Periyar canal ,Sivagangai district ,Sivagangai ,Sivaganga ,Karthi Chidambaram ,district ,Periyar ,Sivaganga district ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்