×

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

 

கோவை, நவ. 18: கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுகுணாபுரம் செந்தமிழ் நகரில் சந்தேகம்படும்படி நின்றிருந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அதில், சிறுவன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்ற சுகுணாபுரம் சக்தி விநாயகர் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அவனிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ரூ.110 பறிமுதல் செய்யப்பட்டது. இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்ற ஒண்டிப்புதூர் ரோடு என்ஜிஆர் புதூரை சேர்ந்த சிவக்குமார் (36) என்பவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Kuniyamuthur ,Sukunapuram Senthamil ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...