×

கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்

 

கோவை, நவ. 18: கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையையொட்டி ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ம் தேதி மாலை அணிந்து 48 நாள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.

கோவை சித்தாபுதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் நேற்று காலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து மாலை அணிந்து விரதம் துவங்கினர்.‌ மாலை அணியும் பக்தர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்ததால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதேபோல் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோயில், சங்கனூர் ஐயப்பன் கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற கோயில்களிலும் ஐயப்ப பக்தர்கள் குவிந்து மாலை அணிந்தனர். அப்போது பக்தர்கள் “சாமியே சரணம் ஐயப்பா” என்ற சரண கோஷம் எழுப்பினர்.

The post கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர் appeared first on Dinakaran.

Tags : Karthika ,Ayyappa ,Coimbatore ,Kartika ,Ayyappan ,Chittabudur, Coimbatore ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!