×

ரூ.1.85 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி: மலேசியாவிலிருந்து திருச்சிக்கு நேற்றுமுன்தினம் இரவு ஏர்ஏசியா விமானம் வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளை சோதனையிட்டதில் கேப்சூல்ஸ் போன்ற உருண்டையான நெகிழி உறைகளுக்குள் பசைவடிவிலான ரூ.1.85 கோடி தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.1.85 கோடி தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,AirAsia ,Malaysia ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்