×

உத்தரகாண்டில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பலி

நைனிடால்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நைனிடால் மாவட்டத்தில் உள்ள பட்லோட்டில் இருந்து அம்ஜாத் செல்லும் வேன் நேற்று காலை புறப்பட்டது. இந்த வேன், செடகான்-மிடார் சாலையை கடந்த போது எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க விலக்கிய போது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இவர்களது மறைவுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post உத்தரகாண்டில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Nainital ,Amjad ,Badlot ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழில்நுட்ப...