×

ராபி பருவத்தில் கோதுமை சாகுபடி பரப்பளவு குறைந்தது: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நடப்பு ராபி பருவத்தில் தற்போது வரை 5% குறைவாக 86.02 லட்சம் ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு ராபி (குளிர்கால விதைப்பு) பருவத்தில் 86.02 லட்சம் ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 5.01% குறைவாகும்.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 91.02 லட்சம் ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டது. உ.பி.,யில் 3.87 லட்சம், பஞ்சாபில் 2.28 லட்சம், அரியானாவில் 2.14 லட்சம், குஜராத்தில் 0.71 லட்சம், ம.பி,யில் 3.44 லட்சம், ராஜஸ்தானில் 0.68 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், கோதுமை சில்லறை விலையைக் கட்டுப்படுத்தவும் அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. மேலும், கையிருப்பில் இருந்தும் கோதுமையை திறந்த வெளிச்சந்தைக்கு அரசு கொண்டு வருகிறது.

The post ராபி பருவத்தில் கோதுமை சாகுபடி பரப்பளவு குறைந்தது: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union ,New Delhi ,Rabi ,Union Government ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...