×

தேங்கியுள்ள மழை நீரில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த சிறுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு, உசேன் நகர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் சாலையில் தேங்கி நின்றுள்ளது. இது சம்பந்தமாக மழை நீரை அகற்ற வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை வலியுறுத்தியும் மழை நீர் அகற்றப்படவில்லை. இதன் காரணமாக 7வது வார்டு உறுப்பினர் அப்பாஸ் கான் தேங்கியுள்ள மழை நீரில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

The post தேங்கியுள்ள மழை நீரில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,7th Ward ,Siruvadi Panchayat ,Marakanam ,Villupuram District ,Usain Nagar ,Dinakaran ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...