×

விவசாயிகளை போராட தூண்டிய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது கலெக்டர் உத்தரவு செய்யாறில் மேல்மா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

செய்யாறு, நவ. 17: செய்யாறில் மேல்மா சிப்பாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளை போராட தூண்டிய 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மேல்மா சிப்காட் விரிவாக்கம் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மேல்மா கூட்ரோட்டில் கடந்த ஜூலை 2ம் தேதி முதல் 126 நாட்களாக கீற்று கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் மூலமாக விவசாயிகள் நிலம் கையகப்படுத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் குடியுரிமை, வாக்குரிமை சம்பந்தமான ஆவணங்களை செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகாவிடம் அளிக்க செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முகப்பு வாயிலில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து அன்று மாலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் விடுவித்தும் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த செய்யாறு சப் கலெக்டர் அனாமிகாவிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். இந்நிலையில் அனுமதி இன்றி ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல முயன்ற 96 பெண்கள் உள்பட 147 விவசாயிகள் மீது செய்யாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 4ம்தேதி விடியற்காலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள்(45) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர், கடலூர் பாளையங்கோட்டை புயல் என பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா தாலுகா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருள்(45), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(47), எருமைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவன்(45), மணிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சோழன்(32), மேல்மா கிராமத்தைச் சேர்ந்த திருமால்(35), நர்மாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி, குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் (38) ஆகியோருக்கு குண்டர் தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவினை வழங்கப்பட்டது மேலும் அவரவர் குடும்பத்தாருக்கும் கடிதம் போலீசார் மூலம் நேற்று வழங்கப்பட்டது.

The post விவசாயிகளை போராட தூண்டிய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது கலெக்டர் உத்தரவு செய்யாறில் மேல்மா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து appeared first on Dinakaran.

Tags : Melma ,Seyyar ,Goon ,Melma Sipai ,Seiyar ,Dinakaran ,
× RELATED துணிக்கடையில் புகுந்து வியாபாரி மீது...