×

மானூர் அருகே ஹீட்டரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மானூர், நவ.17: நெல்லை அருகே மானூரில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் பலியானார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே மறக்குடி ரஸ்தா மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மாரியம்மாள்(29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 2 குழந்தைகளையும் குளிக்க வைப்பதற்காக மாரியம்மாள் மின்சார வாட்டர் ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். சுவிட்சை ஆப் செய்யாமல் அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என சோதித்து பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாரியம்மாளின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மானூர் அருகே ஹீட்டரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Manoor ,Manur ,Nellai ,Bhumkudi Rasta ,Manoor, Nellai district ,Dinakaran ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது