×

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும்

திருச்செங்கோடு, நவ.17: சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர்கள், தங்களது குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டுமென அமைச்சர் மதிவேந்தன் கேட்டுக்கொண்டார். திருச்செங்கோடு மலை சுற்றுப்பாதை அருகே உள்ள திருமண மண்டபத்தில், விழுப்புரம் மருதூர் டாக்டர் ஹேமந்த் பாபு -திருச்செங்கோடு கூட்டப்பள்ளி டாக்டர் சாருமதி ஆகியோரின் சுயமரியாதை திருமணத்தை, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் நடத்தி வைத்தனர். மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு, மோதிரம் அணிந்து கொண்டனர்.

விழாவில், அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பேசுகையில், ‘நான் அமைச்சரான பிறகு நடத்தி வைக்கும் முதல் சுயமரியாதை திருமணம் என்பதில் பெருமை கொள்கிறேன். மணமக்கள் இருவரும் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள். சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது திமுக அரசு. எனது தந்தை டாக்டர் மாயவனும் சுயமரியாதை திருமணம் செய்தவர் தான். மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயராக சூட்ட வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில், டாக்டர் மாயவன், நகர செயலாளர் கார்த்திகேயன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். நிர்வாகிகள் மயில்சாமி, ரமேஷ், கௌதம், சாதிக், பிரபாகரன், கார்த்திக், சண்முகவடிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Minister ,Mathiventhan ,Tiruchengode ,
× RELATED மல்லசமுத்திரத்தில் ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்