×

விவசாயிக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு 6 மாதம் சிறை

 

திருவாடானை, நவ.17: திருவாடானை அருகே ஓரிக்கோட்டை சாந்திபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கடந்த 8.9.2022 அன்று இரவு அவரது வீட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஜெபமாலை மகன் அஜய்(எ) அஜித்(21) என்பவர் கருப்பையா வீட்டிற்கு சென்று உன் மகன் எங்கே என பிரச்னை செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் அஜித் கத்தியால் கருப்பையாவை குத்தியுள்ளார்.

இதில் அவருக்கு தலையின் பின்பக்கம் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விலகி விட்டுள்ளனர். இது குறித்து கருப்பையா திருவாடானை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு திருவாடானை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பிரசாந்த் குற்றம்சாட்டப்பட்ட அஜய்(எ)அஜித்திற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

The post விவசாயிக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு 6 மாதம் சிறை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Karupiya ,Orikottai Santipuram ,
× RELATED திருவாடானை அருகே தீப்பிடித்து எரிந்த வைக்கோல்