×

தொடர் கனரக வாகன போக்குவரத்து சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்

 

கரூர், நவ. 17: தொடர் கனகர வாகன போக்குவரத்து காரணமாக பழுதடைந்துள்ள வெங்கடேஷ்வரா நகர்ச்சாலை சீரமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் இருந்து ராயனூர் செல்லும் சாலையில் வெங்கடேஷ்வரா நகர் பகுதி உள்ளது. நான்கு தெருக்கள் உள்ள இந்த சாலையில் நு£ற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இந்த சாலையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு தினமும் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.எனவே, வெங்கடேஷ்வரா நகர்ச்சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி சாலையை ஆய்வு மேற்கொண்டு, இந்த பகுதி மக்கள் நலன் கருதி இதனை புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தொடர் கனரக வாகன போக்குவரத்து சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur ,Venkateswara ,Dinakaran ,
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு...