×

திருவையாறு அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் 2 செல்போன் திருட்டு

 

திருவையாறு, நவ.17: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த பள்ளியக்ரஹாரத்தைச் சேர்ந்த குணசீலன் மனைவி கயல்விழி (29). இவர் 108 ஆம்புலன்ஸில் முதலுதவி நுட்புநராகப் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மணக்கரம்பை இ சேவை மைய அலுவலகத்தில் 108 ஆம்புலன்சில் அலுவலக செல்போன் மற்றும் அவர் பயன்படுத்தும் செல்போன் இரண்டையும் வண்டியில் சார்ஜர் போட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 செல் போன்களையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் கயல்விழி புகார் செய்தார். புகாரின்பேரில் நடுக்காகவேரி சப்இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் புகார் மனுவை பெற்றுக்கொண்டு செல்போன் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post திருவையாறு அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் 2 செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : THIRUVAYARU ,Thiruvaiyaru ,Gunaseelan ,Kayalvizhi ,Thiruvaiyaru, Thanjavur district ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா