×

பீகாரில் ரயிலில் குண்டுவெடிப்பு: 4 பேர் காயம்; 2 பேர் கைது

சமஸ்திபூர்: பீகாரின் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் இருந்த ரயிலுக்குள் குண்டு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து சமஸ்திபூர் கோட்ட ரயில்வே மேலாளர் வினய் ஸ்ரீவத்சவா கூறுகையில், “புதன்கிழமை பிற்பகல் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் வௌியே நின்றிருந்த பகல்பூர் தர்பங்கா இன்டர்சிட்டி விரைவு ரயிலில் குண்டு வெடித்தது. ரயில் பயணிகள் 4 பேர் காயமடைந்தனர். விசாரணையில் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் மண்டேல், நவேந்து மண்டல் ஆகிய பயணிகள் வெடிமருந்துகளுடன் ரயில் பயணித்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

The post பீகாரில் ரயிலில் குண்டுவெடிப்பு: 4 பேர் காயம்; 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bihar ,train blast ,Samastipur ,Samastipur railway station ,Samastipur Kotta ,Bihar Train Blast ,Dinakaran ,
× RELATED பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு...