×

தன்னுடன் நெருக்கமாக இருந்ததை படம் பிடித்து வைத்து கல்லூரி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம்: 4 பிரிவில் வழக்கு பதிந்து வக்கீலுக்கு வலைவீச்சு

திருவொற்றியூர்: சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் சென்னையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் முதல் வருடம் படிக்கின்றார். மேலும் பகுதி நேரமாக தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகின்றார்.

திருவொற்றியூர், சாத்துமா நகரை சேர்ந்த உதயா(எ) உதயபாஸ்கர் (32). வக்கீலான இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளது. இவர் அடிக்கடி பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வரும்போது கல்லூரி மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மாணவியை திருமணம் செய்துக்கொள்வதாக கூறியுள்ளார். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரை பார்க்கலாம் எனக்கூறி மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். இதன்பின்னர் அங்குவைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்து அவற்றை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துவைத்துள்ளார். இதன்பிறகு அந்த வீடியோவை காண்பித்து அடிக்கடி கட்டாயப்படுத்தி கல்லூரிக்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனிடையே உதயபாஸ்கருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் விஷயம் தெரியவந்ததும் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உதயபாஸ்கருடன் தொடர்பைவிட்டதுடன் தனது செல்போனையும் ஆப் செய்துவிட்டார். இதையடுத்து நேற்றுமுன்தினம், மாணவியின் வீட்டுக்கு பைக்கில் சென்ற உதயபாஸ்கர் ‘தன்னுடன் வந்து தனிமையில் இருக்கவேண்டும். இல்லாவிடில் ஆபாச வீடியோவை வெளியிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விசாரித்தபோது தனக்கு நடந்தது பற்றி மாணவி தெரிவித்து அழுதுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தபோது உதயபாஸ்கர் தப்பியோடிவிட்டார். இதுசம்பந்தமாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரணை செய்தனர். இதில் உதயபாஸ்கர், ஆந்திராவில் வழக்கறிஞராக படித்துள்ளார். இவர்மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளது. தனக்கு திருமணமானதை மறைத்து மாணவியை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்’’ என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து உதயபாஸ்கர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post தன்னுடன் நெருக்கமாக இருந்ததை படம் பிடித்து வைத்து கல்லூரி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம்: 4 பிரிவில் வழக்கு பதிந்து வக்கீலுக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Puduvannarappet, Chennai ,Chennai ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...