சென்னை: சட்டப்படி ஆளுநரை செயல்பட வைத்திருக்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு சட்ட ரீதியாக ஒப்புதல் இல்லை என்றால் மட்டுமே திருப்பி அனுப்பலாம். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்காக ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது என்றார். நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
The post சட்டப்படி ஆளுநரை செயல்பட வைத்திருக்கிறோம்: தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ்.அழகிரி சாடல் appeared first on Dinakaran.