×

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிப்பு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சீர்காழி -1,088 ஹெக்டேர், கொள்ளிடம் 1,200 ஹெக்டேர், செம்பனார்கோவில் 600 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களாக நீரில் மூழ்கிய விளை நிலங்களை அரசு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கோரிக்கையை அடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சீர்காழி அருகே நல்லூர் கிராமத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்.

The post மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிப்பு: அமைச்சர் மெய்யநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai district ,Minister ,Meiyanathan ,Mayiladuthurai ,Sirkazhi ,Kollidam ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...