×

வெள்ளக்கோவிலில் பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் பழுது; சீரமைக்க மக்கள் கோரிக்கை

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் இடியும் நிலையில் பத்திரப்பதிவு அலுவலக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளக்கோவில், கல்லாங்காட்டுவலசு என்ற இடத்தில் 201- ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம், மங்கலப்பட்டி, சேனாபதிபாளையம், பச்சாபாளையம்,வள்ளியரச்சல், வீரசோழபுரம், உத்தமபாளையம், முத்தூர், ராசாத்தாவலசு, வேலம்பாளையம், சின்னமுத்தூர், ஆகிய கிராமங்கள் அடங்கும். இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அனைத்து பத்திரப்பதிவு மற்றும் இதர தேவைகளுக்கு இந்த வெள்ளக்கோவில் பத்திரபதிவு அலுவலகத்திற்கு வர வேண்டி உள்ளது. இதனால் தினசரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை சுற்றி ஏராளமான பத்திரப்பதிவு எழுத்தாளர்கள், விண்ணப்பம் எழுதுபவர்கள், முத்திரை தாள் விற்பனையாளர் மற்றும் கடைகள் உள்ளன. பத்திரப்பதிவு அலுவலகம் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பத்திர பதிவு அலுவலக கட்டிடம் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உள்ளது. ஆகையால் தற்போது மழைக்காலம் என்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு உடனே பத்திரப்பதிவு அலுவலக கட்டிடத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post வெள்ளக்கோவிலில் பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் பழுது; சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Dinakaran ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்