×

கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய 2 சிறுவர்கள் பலி: சடலம் கரை ஒதுங்கியது

தண்டையார்பேட்டை, நவ.16: காசிமேடு மீன்பிடி துறைமுக கடலில் குளித்தபோது அலையில் இழுத்துச்செல்லப்பட்ட மாணவன் உள்ளிட்ட 2 சிறுவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது. புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாக்கியா. இவரது மகன் தருண் (12). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் சாமுவேல். இருவரும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் கடந்த 13ம் தேதி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அலையில் சிக்கி இருவரும் இழுத்து செல்லப்பட்டனர். இவர்களை தீயணைப்பு துறையினர், மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை சென்னை துறைமுகம் 7வது நுழைவாயில் பகுதியில் துறைமுகம் கடற்கரையில் இருவரின் சடலங்களும் ஒதுங்கின. இதுகுறித்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு விசாரணை செய்ததில் கடலில் குளித்தபோது மாயமான தருண் மற்றும் சாமுவேல் உடல்கள் என்று தெரிய வந்தது. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய 2 சிறுவர்கள் பலி: சடலம் கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Kasimedu ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...