×

உபி மாநிலத்தில் சென்ற போது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ: 4 பெட்டிகள் எரிந்து நாசம்

* 8 பயணிகளுக்கு காயம்

எட்டாவா: உத்தரப் பிரதேசத்தின் எட்டாவா அருகே சென்று கொண்டு இருந்த புதுடெல்லி-தர்பங்கா சிறப்பு விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. இதில் 8 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. சாத் பூஜையை முன்னிட்டு டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா அருகே சென்று கொண்டு இருந்த போது ரயிலின் 4 பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. சராய் போபட் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து தீப்பற்றிய ரயில் பெட்டிகள் ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்டன. இந்த தீ விபத்தில் 8 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதேசயம் ரயிலில் எப்படி தீப்பிடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. 4 பெட்டிகள் முழுவதும் எரிந்து நாசமானது. பயணிகள் காயம் அடைந்தால் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தீ விபத்து குறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறுகையில், ‘புதுடெல்லி-தர்பங்கா சிறப்பு விரைவு வண்டி பெட்டி எண் எஸ்1ல் முதலில் தீப்பற்றியது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

The post உபி மாநிலத்தில் சென்ற போது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ: 4 பெட்டிகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : UP ,Ettawa ,New Delhi ,Darbanga ,Ettawa, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...