×

பெண், முதியவர் வெட்டி கொலை

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி கரையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (40). மனைவி முத்துலட்சுமி (35). 14 வயதில் மகள் உள்ளார். இவர்களுடன் ஈஸ்வரனின் தாய் செல்லாயி (70) வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரன், மனைவி முத்துலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, மனைவியை அரிவாளால் வெட்ட ஓடியுள்ளார். இதை தொடர்ந்து வீட்டில் படுத்திருந்த தாய் செல்லாயி, மகளை ஈஸ்வரன் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்து, தெருவில் படுத்திருந்த பெரியணாண்டி (80) என்ற முதியவரையும், அங்கிருந்த மாட்டையும் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி செல்லாயி, முதியவர் பெரியணாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனர்.

The post பெண், முதியவர் வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Nattam ,Iswaran ,Kosukurichi Kariyoor ,Nattam, Dindigul district ,Muthulakshmi ,
× RELATED நத்தம் அருகே கோவில்பட்டியில் விவசாய உபகரணங்கள் கண்காட்சி