×

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2021 அக்டோபர் 17ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல்குவாரிகள், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 210 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை இன்று காலை நடந்தது. விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் ஆஜராகவில்லை. நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், வழக்கை வரும் டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Vijayabaskar ,Pudukkottai ,Pudukkottai District ,Ilupur Saurashtra Street ,minister ,Viralimalai ,MLA ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்